Swamiye

Saranam

Ayyappa

About Us,
History & Origin
and More...

Villivakkam Sree Viswanatha Sharma Ashta Sastha Temple Trust is a Religious and Charitable Trust started in 2011 to bring various facets of Sastha into light by building a temple for Ashta Sastha. The trust is started in the name of our beloved Guruswamy Brammasri Viswanatha Sharma, who has sacrificed his entire life for the service of Lord Ayyappa.

Temple Services
UI/UX Design

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam.

Brand Identity

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam.

Web Design

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam.

Mobile Apps

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam.

Analytics

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam.

Photography

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam.

Recent Posts

சந்தான பிராப்தி தாயகருக்கு 24-ஜூலை-2022,ஞாயிறு (சுபகிருது வருடம் ஆடி மாதம் 8, ஏகாதசி திதி) அன்று விசேஷ அபிஷேகம்

 ஸ்வாமி சரணம்,


சந்தான பிராப்தி (மக்கட்பேறு) வேண்டி சபரிமலைக்கு பிரார்த்தனையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வருகிறார்கள். அவர்களின் பெரும்பாலானோர் பிரார்த்தனைகள் கலியுகவரதன் ஐயப்பன் அருளால் கை கூடுகின்றன.


அவரது அருள் கைகூடுவதை மேலும் எளிதாக்கி, சபரிமலைக்கு செல்ல இயலாத அன்பர்களும் அவனருள் பெரும்வண்ணம் சந்தான பிராப்தி தாயகருக்கு 24-ஜூலை-2022,ஞாயிறு (சுபகிருது வருடம் ஆடி மாதம் 8, ஏகாதசி திதி) அன்று விசேஷ அபிஷேகம் அஷ்ட சாஸ்தா திருக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அபிஷேகம் அன்று கோவிலில் வெல்ல அடை (கேரளாவில் வெல்ல அடை/இலை அடை என்று அழைப்பர், இதையே தமிழ் நாட்டில் வெல்லபூரணம் கொழுக்கட்டை என்று அழைப்பர்) நெய்வேத்தியமாக கோவில் சார்பில் பிரசாதமாக அளிக்கப்படும். பக்தர்கள் தயிர் அபிஷேகம் செய்து பிரசாதம் எடுத்து செல்ல container கொண்டு வருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.   


அபிஷேகம் பற்றி மேலும் விவரங்களுக்கு +918072899892 /+919444109431 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


சந்தன பிராப்தி சாஸ்தா (ஆரிய சாஸ்தா என்றும் சிலர் அழைப்பர்) நம் அஷ்ட சாஸ்தா கோவிலில் பிரதிஷ்டை செய்ய உள்ள மூர்த்தி ஆகும். இவர் சத்யகன் (செல்லப்பிள்ளை) மற்றும் பிரபாவதி என்ற மனைவியுடன் காட்சி அளிக்கிறார். 


சில்பரத்தினம் என்ற நூலில் சாஸ்தாவை பிரம்ம,விஷ்ணு, சிவனின் அம்சம் என்று குறிப்பிட்டுள்ளது. ஹரிஹர சக்திகளான லக்ஷ்மியும் துர்க்கையும் ஆதி சாஸ்தாவுக்கு பூரணா-புஷ்களாவாக அலங்கரிக்கின்றார்கள். பிரம்மனின் சக்தியான சரஸ்வதியானவள் "பிரபா" என்ற பெயரில் சாஸ்தாவை காந்தர்வ முறையில் மணந்து "சத்யகன்" என்ற செல்லப்பிள்ளையுடன் கொலுவிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. 


பிரபாவதி சாஸ்தா காந்தர்வ விவாஹம் அடிப்படையில் எங்கள் குருநாதர் இயற்றிய சாஸ்த்ரு அஷ்டபதி அமைந்துள்ளது. 


கல்லிடைக்குறிச்சி, கொச்சி, நூரணி போன்ற பல இடங்களில்  நடைபெற்று வரும் சாஸ்தா ப்ரீதியில் செல்லப்பிள்ளைக்கு தனி ஸ்தானம் உண்டு.


ஸ்ரீ பூதநாத கராவலம்பத்தில் "சம்பூர்ண பக்த வர சந்ததி சீல"என்று வருகிறது. சாஸ்தாவின் மூலமந்திரத்தில் "புத்ரலாபாய" என்று வருகிறது.


திருவல்லகாவு என்ற இடத்தில் சாஸ்தா பிரபாவதி சத்யகனுடன் காட்சி அளிக்கிறார். மேலே குறிப்பிட்டது போல் சரஸ்வதி ஸ்வரூபமான ப்ரபாவதியுடன் காட்சி அளிப்பதால் அந்த கோவிலில் சாஸ்தாவை ஞான மூர்த்தியாக வழிபடுகின்றனர். 


பாலக்காடு அருகே  செருப்பளாசேரி என்ற இடத்தில் சத்யகன் பிரபாவதியுடன் சாஸ்தாவை வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் சந்தான பிராப்திக்கு வெல்ல-அடை நெய்வேத்தியமாக வைக்கப்படுகின்றது.

சாஸ்தா திருக்கல்யாண வைபவம், சுபகிருது வருடம் வைகாசி விசாகம், 12-06-2022 ஞாயிறு காலை

 *சாஸ்தா திருக்கல்யாண வைபவம் அழைப்பிதழ்*

*நாள்: சுபகிருது வருடம் வைகாசி விசாகம், 12-06-2022 ஞாயிறு காலை*

*இடம்: வேப்பம்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) அஷ்ட சாஸ்தா திருக்கோயில்* 

ஸ்வாமி சரணம்,

வரும் வைகாசி விசாகமன்று சாஸ்தா திருக்கல்யாண வைபவம் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில் நடக்க இருக்கின்றது. 

திருமண தடை உள்ளவர்கள் தங்களது ஜாதகத்தை கல்யாண உற்சவத்தின் போது சுவாமியிடம் வைத்து பிரார்த்தனை செய்து மங்கள அட்சதையுடன் எடுத்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தங்களால் வர முடியாத நிலையில் ஜாதகத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் அனுப்பும் ஜாதகத்தை கல்யாண உற்சவத்தன்று சங்கல்பத்தில் சேர்த்து கொள்கிறோம்:

ஸ்ரீ அஷ்ட சாஸ்தா (ஐயப்பன்) திருக்கோவில்,

சாய் நகர்,

வேப்பம்பட்டு-89

திருவள்ளூர் மாவட்டம்

Pin code: 602 024

9444109431

மேலும் தாங்கள் விருப்பம்போல் சுவாமியிடம் வஸ்திரம் / புடவை சாத்தி எடுத்துக்கொள்ளலாம். 

திருமாங்கல்யம் பூரணா புஷ்களாவிடம் சாத்தி எடுத்துக்கொள்ளலாம். உங்கள் இல்லத்தில் சுபமங்களம் வரவேண்டி கல்யாண உற்சவத்தில் அளிக்கப்படும் மங்கள அட்சதையை பாதுகாப்பான அலமாரியில் / பூஜை அறையில் வைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

கல்யாண உற்சவம் அன்று நடக்க இருக்கும் அன்னதானதுக்கு நன்கொடை (account இல் நேரடியாக / பொருளாக) ஏற்கப்படும். மேலும் விவரங்களுக்கு  +917845787155 (சிவராஜ் குருஸ்வாமி) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் 

பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு இந்த விழாவினை  சிறப்பிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

சாஸ்தா திருக்கல்யாண வைபவம் - சிறு குறிப்பு 

சாஸ்தா திருக்கல்யாணம் பஜனை பத்தியில் உருவாக்கி ஆன்மீக உலகிற்கு அளித்தவர் எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா. 

பக்தர்கள் இல்லத்தில் சுப மங்களம் ஏற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தான் சீதா கல்யாணம், மீனாட்சி கல்யாணம், வள்ளி திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடக்கின்றன. எல்லாம்வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவதற்காக பற்பல அவதாரங்கள் எடுத்தார். அவரது லீலைகளை ஸ்ரவணம் செய்து, நாம சங்கீர்த்தனத்தில் பங்கேற்பது உத்தமமான விஷயமாகும். கலியுகத்தின் ப்ரத்யக்ஷ தெய்வமான ஹரிஹரசுதனுடைய கல்யாண குணங்களை பாடி ஆடுவதை ஸ்ரவணம் செய்வதன் மூலம் நல்ல வாழ்க்கை துணையை அடைகிறார்கள் என்பது அனுபவ பூர்வ உண்மையாகும்.  

சபரிமலையில் நித்ய பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பனுக்கு எப்படி சாத்தியமாகும்? இந்த கல்யாணம் எங்கு நடந்தது? அதற்கு ஆதாரம் யாவை? போன்ற கேள்விகளுக்கு கல்யாண உற்சவத்தில் விளக்கம் அளிக்கப்படும்.

சாஸ்தா திருக்கல்யாணம் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம். லலிதா சஹஸ்ரநாமத்தில் "பூரணா" என்றால் "எங்கும் வியாபித்து இருப்பவள்" என்று பொருள், "புஷ்கரா" என்றால் "எங்கும் நிறைவாகி இருப்பவள்" என்று பொருள். அங்கெங்கிநாதபடி எங்கும் பிரகாசமான காந்தமலை ஜோதியாய் பகவான் எல்லா இடத்திலும் பூரணமாக, புஷ்கரமாக காட்சி அளிக்கிறார் என்று பொருள் கொள்ளலாம். மேலும் பல்வேறு தகவல்கள் கல்யாண் உற்சவத்தில் அளிக்கப்படும்

0

வேத சாஸ்தா விசேஷ பூஜை, வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயில் 16/04/2022, சுபகிருது வருடம் சித்திரை மாதம் 3, சித்ரா பௌர்ணமி

 ஸ்ரீ வேத சாஸ்தாவுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயிலில் விசேஷ பூஜை, சாஸ்தா ஹோமம் நடக்க இருக்கின்றன.

நாம் பின்பற்றுவது சனாதன தர்மம்/சனாதன மதம். நம் சனாதன தர்மத்துக்கு ஆணிவேர் வேதங்கள். வேத சம்ரக்ஷணம் (அதாவது நம் வேதத்தை பேணிக் காப்பது) நாம் அனைவருடைய கடமையாகும். நாம் காக்கும் தர்மம் நம்மை காக்கும்.

*தர்மோ ரக்ஷதி ரக்ஷித:*

சாஸ்தாவின் முகத்திலிருந்து தான் வேதங்கள் தோன்றின. *ௐ வேத முகாயை நம:* என்று சாஸ்தா சஹஸ்ரநாமத்தில் உள்ளது.

இன்னும் சில நாமங்கள்:

* *ௐ மந்திர வேதினே நம:*

* *ௐ மஹா வேதினே நம:*

* *ௐ ரிக் யஜூஸ் சாம அதர்வ ரூபிணே நம:*

போன்ற நாமங்கள் நமக்கு உணர்த்தும் விஷயம்: வேதங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சாஸ்தா.

சாஸ்தா நமஸ்கார ஸ்லோகங்களில் 2வது வரி *"விப்ர பூஜ்யம் விஸ்வ வந்தியம்"*, 

அதில் *விப்ர பூஜ்யன்* பொருள்: வேதம் கற்றறிந்தவர்களால் பூஜிக்க படுபவன்.

சேலம் - எடப்பாடி அருகில் வெடிகாரம்பாளையம் என்ற கிராமத்தில் வேத மூர்த்தியாக சாஸ்தாவை வழிபட்டு வருகின்றனர்.

இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த வேத சாஸ்தாவுக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம்? 

பக்தர்கள் அனைவரும் இந்த பூஜைகளில் கலந்துக்கொண்டு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட அன்புடன் அழைக்கின்றோம். நடக்க இருக்கும் சிறப்பு பூஜைகளுக்கு சங்கல்பம் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு +919444109431 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ஆன்மீக அன்பர்கள் பொருளாகவோ account இல் நேரடியாக காணிக்கை செலுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஸ்ரீ ஆதிபூத நாதர், ஐயப்பன் மற்றும் சின்மய கணபதி சிறப்பு அபிஷேகம் செய்ய தேவைப்படும் சாமான்கள்: விபூதி 1 கிலோ, பால் 3 லிட்டர், தேன் 1 கிலோ, பன்னீர் 5 லிட்டர், சந்தனம் 2 கிலோ, தாழம்பூ குங்குமம் 0.5 கிலோ, நெய் 0.5 கிலோ, இளநீர் 5, மஞ்சள் 0.5 கிலோ, தயிர் 3 கிலோ, சீக்காய் / ஸ்நான பொடி 0.5 கிலோ, ஜவ்வாது

உபயதாரர்கள் தங்களது பெயர் மற்றும் இதர விவரம் கொடுத்தால் எங்களது சிறப்பு ஆராதனை சங்கல்பத்தில் அவர்களது பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம். தங்களால் வர இயலாத சூழ்நிலையில் பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். 

இதை தவிர உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு (குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள் etc.) அன்னதானம் செய்ய நினைத்தால் முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்னதானத்துக்கு நன்கொடை அளித்து  80G வரிவிலக்கு பெறலாம். அன்னதானத்துக்கு நன்கொடை செலுத்துவதற்கு  முன் +919444109431 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ஞான சாஸ்தா விசேஷ பூஜை, வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயிலில் 19/02/2022, பிலவ வருடம் மாசி மாதம் 2, திரிதியை, உத்திரம்

ஞான சாஸ்தா விசேஷ பூஜை, வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயிலில் 19/02/2022, பிலவ வருடம் மாசி மாதம் 2, திரிதியை, உத்திரம் தினத்தன்று விமரிசையாக நடந்தது.


ஞான சாஸ்தா (வித்யா சாஸ்தா) சிறுகுறிப்பு:

சாஸ்தா என்ற பெயருக்கு வழிநடத்துபவர் (அல்லது குரு) என்று அர்த்தம். அதனால் தான் ஐயப்பன் வழிப்பாட்டில் குரு முகமாகவே எந்த ஒரு செயலையும் செய்ய அறிவுரைப்பார்கள். 

ஸ்தல வரலாறு அடிப்படையில் ஞான சாஸ்தா பற்றி:

திருச்சூர் அருகே திருவல்லக்காவு என்ற இடத்தில் சாஸ்தாவை ஞானமூர்த்தியாக வழிப்பட்டு வருகின்றனர். இங்கு வித்யாரம்பம் செய்த (எழுத்துக்கள் தொடங்கும்) ஒரு குழந்தை அறிஞர் ஆவது நிச்சயம் என்ற காரணத்தினால் ஆயிரக்கணக்கனோர் தன் குழந்தைகளின் வித்யாரம்பம் இங்கு செய்வது வழக்கம்.

கும்பகோணம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் தக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ப்ரகாரத்தின் மேல்பத்தியில் கல்யாண சாஸ்தா உற்சவ மூர்த்தியாக வீற்றிரிக்கிறார். ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டம், ஹேமாவதி என்ற ஊரில் சாஸ்தா மாதிரி குந்தியிட்டு உட்கார்ந்த நிலையில் தக்ஷிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்.

சாஸ்தாவின் சஹஸ்ரநாமங்களில் சிலவற்றை பார்க்கலாம்:

“ஓம் தக்ஷிணமூர்த்தி ரூபகாய நம; ஓம் வீணா புஸ்தக தர தக்ஷிணாமூர்த்தி சாஸ்த்ரே நம:” etc போன்ற நாமங்கள் நமக்குணர்த்தும் விஷயங்கள்: சாஸ்தா மாணிக்க வீணையை ஏந்திய கையுடன், கல்லால மரத்தின் அடியில் அமர்ந்துள்ள குருபகவான் போல் குரு ஸ்தானத்தில் அமர்ந்து மேதா தக்ஷிணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார். 

“ஓம் சர்வ ஸ்த்ரார்த்ரார்த்த தத்வஞாய நம, ஓம் வித்யா விருக்ஷாய நம, ஓம் மூல வித்யா ஸ்வரூபகாய நம” etc என்றெல்லாம் சாஸ்த்ரு சஹஸ்ரநாமத்தில் படித்திருக்கிறோம் அல்லவா?

இவ்வுலகில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான எல்லாத் துறைகளைப் பற்றிய அறிவுவையும் தன் பக்தர்களுக்கு வழங்குபவர். 

இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த ஞான சாஸ்தாவுக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம்? உங்களால் வர இயலவில்லை என்ற குரல் எங்களுக்கு கேட்கிறது. உங்களது இல்லத்தில் ஸ்ரீ ஞான சாஸ்தா படத்தை பூஜித்து இதன் பூஜா பலன்களை பெறலாம். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை நிற்கட்டும். சுவாமியே சரணம் ஐயப்பா!!!

உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு (குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள் etc.) அன்னதானம் செய்ய நினைத்தால் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

https://youtu.be/6Jq12uXhZdQ


ஸ்ரீ ஆதிபூத நாதர் விசேஷ பூஜை/ஹோமம், வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயில், ஜனவரி 14, 2022: சிறு குறிப்பு

 ஸ்ரீ ஆதிபூத நாதர்


விசேஷ பூஜை/ஹோமம், வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயில், ஜனவரி 14, 2022: சிறு குறிப்பு

நம்முடைய  இந்து மதத்தை போலவே சாஸ்தா வழிபாடும் சனாதனமானது. நமது நாகரீகத்தை வேதகால நாகரீகம் என்று சொல்லப்படுகிறது. எந்தவொரு சந்தேகம் ஏற்பட்டாலும் வேதமே பிரமாணம் ஆகிறது. வேதம் எப்பொழுது தோன்றியது என்று எவருக்கும் தெரியாது. ஆனால் வேத காலத்துக்கு முற்பட்டவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று பார்ப்போம். 

கல்லை ஆயுதமாகவும் இலை தழைகளை ஆடைகளாகவும் அணிந்த மனிதர்கள் மிருகம் போல்         ஆண்-பெண் பேதம் தெரியாமல் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தங்களது மீறிய செயல்களில் பயந்து வாழ்ந்து வந்தனர். 

பஞ்ச பூதங்களை கண்டு பயந்த கற்கால மனிதன், ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி ஆகியவற்றை தெய்வங்களாக வணங்க வேண்டும் என்று நம்பினான். நம் கண்களால் நம்ப முடியாத அளவுக்கு பெருத்த உருவம் கொண்ட ஒன்றை பூதம் என்று அழைத்தார்கள். இவை தன்னிச்சையாக செயல்படாமல் ஒருங்கிணைந்து செல்வதற்கு ஒரு தலைவன் தேவைப் பட்டான். அவனே பூதநாதன் எனப்படும் ஐயப்ப ஸ்வாமி ஆவார்.  சாஸ்தாவின் மற்றொரு பெயர் பூதநாதன் என்பதாகும். இதற்கு பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவர் என்று பெயர்.

கடவுளாக கும்பிட வேண்டும் என்று நினைத்த கற்கால மனிதன், ஒரு குறிப்பிட்ட பாறைகளையோ மரத்தையோ வணங்க தொடங்கினான். இன்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் உருவமற்ற பாறைகளை வழிபடுவது மரபு

யுகங்களின் அடிப்படையிலும் சாஸ்தா வழிபாடு தொன்மையாகவே விளங்குகிறது. பிரளய காலத்திற்குப் பிறகு, முதல் மன்வந்தரம் முதல் ஆறாவது மன்வந்தரம் வரை சாஸ்தா வழிபாடு இருந்துள்ளது. ஆறாவது மன்வந்தரத்தில் தான் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரஸிம்ம அவதாரங்கள் ஏற்பட்டன. இதில் முதல் மூன்று அவதாரங்களில் சாஸ்தாவே கடலுக்கும் பூமிக்கும் ஆதாரமாக விளங்கினார். பாலாழிமதனம் கடையப் பெற்று சாஸ்தா அவதாரமானதும் இக்காலத்தில் தான். இந்த கால கட்டத்தில் பூவுலகம் ஏழு த்வீபங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றுக்கும் அதிபதி சாஸ்தாவே ஆகும். (உ.ம்: குசாதிப: சால்மலீபதி:). நரஸிம்ம அவதாரத்தில் காத்யாயன மகரிஷியின் பெண்ணான காத்யாயனி தேவிக்கு புத்திரனாக காத்யாயினி ஸுத: என்றும் ஸ்வாமி அழைக்கப்படுகிறார். வாமனாவதாரத்தில் வாமன பூஜித: என்று அழைக்கப்படுகிறார். இவை நடந்தது க்ருத யுகத்தில் ஆகும்.

க்ருத யுகத்தில் தொடங்கி பல யுகங்களில் அவதரித்து, கலியுக ப்ரத்யக்ஷம் என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியது போல், கலியுகத்தில் பக்தர்கள் இறைவனை சரணமடைவதுமே ஸ்வாமி கலியுக தெய்வம் என்பதை பறைசாற்றுகின்றன. 

ஆக நான்கு யுகங்களையும், பல மன்வந்தரங்களையும் கடந்து சாஸ்தா யுக புருஷனாக இருக்கிறான் என்பது வெள்ளிவிடைமலை.

“ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா

ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ”

என்ற ஸ்லோகத்தில் சாஸ்தாவை பூத நாதனாக வர்ணித்து இந்த உலகையே காக்க வேண்டுகின்றோம் அல்லவா?

மஹிஷி சம்ஹாரத்தின் பொருட்டு ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியது சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தாவின் கலியுக அவதாரம். இந்த அவதாரத்தில் நைஷ்டீக ப்ரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறார் ஐயன்.  ஆனால் ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு. அச்சன்கோவில், சொரிமுத்து ஐயனார், காடந்தேத்தி, காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் போன்ற இடங்களில் பூர்ணா புஷ்களா சமேத சாஸ்தாவாக கையில் செண்டாயுதம் தரித்து இவரை காணலாம். இவரை தமிழகத்தில் ஐயனார் என்று அழைப்பார்கள். ஆதி சாஸ்தா மூவுலகங்களையும் காத்து ரட்சித்து ஆள்பவர். மழை பெய்து, நீர் வளம் நிலவளம் பெருக்கி பயிர் செழிக்க அருள்பவர். காணாமல் போன பொருட்களை திரும்ப பெற்று தருபவர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் சாஸ்தாவின் செண்டாயுதத்தை கொண்டு தான் கரிகால சோழன் இமய மலை வரை வென்றதாக ஒரு குறிப்பு உள்ளது. 

காஞ்சி மஹா பெரியவர் எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மாவிற்க்கு கொடுத்த அருளாணையின்படி ஆதி பூதநாதரே வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோவிலில் மூலவராக வர இருக்கிறார்.

ஸ்ரீ ஆதி பூதநாதருக்கு ஜனவரி 14 காலை 9.00 - 10.30 மணியளவில் வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயிலில் விசேஷ பூஜை, சாஸ்தா ஹோமம் நடக்க இருக்கின்றன.

பக்தர்கள் அனைவரும் இந்த பூஜைகளில் கலந்துக்கொண்டு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட அன்புடன் அழைக்கின்றோம். நடக்க இருக்கும் சிறப்பு பூஜைகளுக்கு சங்கல்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆன்மீக அன்பர்கள் பொருளாகவோ account இல் நேரடியாக காணிக்கை செலுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஸ்ரீ ஆதிபூத நாதர், ஐயப்பன் மற்றும் சின்மய கணபதி சிறப்பு அபிஷேகம் செய்ய தேவைப்படும் சாமான்கள்: விபூதி 1 கிலோ, பால் 3 லிட்டர், தேன் 1 கிலோ, பன்னீர் 5 லிட்டர், சந்தனம் 2 கிலோ, தாழம்பூ குங்குமம் 0.5 கிலோ, நெய் 0.5 கிலோ, இளநீர் 5, மஞ்சள் 0.5 கிலோ, தயிர் 3 கிலோ, சீக்காய் / ஸ்நான பொடி 0.5 கிலோ, ஜவ்வாது

உபயதாரர்கள் தங்களது பெயர் மற்றும் இதர விவரம் கொடுத்தால் எங்களது சிறப்பு ஆராதனை சங்கல்பத்தில் அவர்களது பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம். தங்களால் வர இயலாத சூழ்நிலையில் பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். 

இதை தவிர உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு (குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள் etc.) அன்னதானம் செய்ய நினைத்தால் முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்னதானத்துக்கு நன்கொடை அளித்து  80G வரிவிலக்கு பெறலாம். அன்னதானத்துக்கு நன்கொடை செலுத்துவதற்கு  முன் 9444109431 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

May'2022 - Ashta Sastha Temple Project Status

 அஷ்ட சாஸ்தா திருக்கோவில் சார்பில் அனைவருக்கும்  நமஸ்காரங்கள்,


2022 முதல் நம் கோவிலில் மாதம் ஒரு விசேஷ பூஜை நடந்து வருகிறது நம் அனைவருக்கும் தெரிந்திருக்க கூடும். 


* ஜனவரி ஆதிபூதநாதர்

* பிப்ரவரி ஞான சாஸ்தா

* மார்ச் தர்ம சாஸ்தா

* ஏப்ரல் வேத சாஸ்தா


அடுத்து மே 29 பால் குடம் எடுக்க பிளான் செய்து வருகிறோம். அதனை தொடர்ந்து ஜூன் 11 வருஷபூஜையுடன் கல்யாண வரத சாஸ்தாவுக்கு விசேஷ பூஜை செய்ய நினைக்கிறோம்.

ஜூன் 11 வருஷ பூஜை

ஜூன் 12 சாஸ்தா கல்யாணம் அஷ்ட சாஸ்தா கோயிலில் செய்ய நினைக்கிறோம்.


இதுவரை பக்தர்கள் பூஜைக்கு பல விதங்களில் ஒத்துழைப்பு அளித்துள்ளீர்கள். உங்களது பங்களிப்பிற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்


ஜூன் மாதம் 2 நாட்கள் நிகழ்ச்சி என்னும்பொழுது அதற்கேற்ப ஏற்பாடுகளும் நிறைய செய்ய வேண்டி இருக்கும். 


இதை தவிர கோவில் வளாகத்தில் flooring செய்ய, 18 படி பிரதிஷ்டை போன்ற சில விஷயங்கள் ஆரம்பிக்க நினைக்கிறோம்.ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்த கோவில் திருப்பணியில் இணைந்து தங்களால் இயன்ற காணிக்கையை கொடுத்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


மேலே குறிப்பட்டது போல் paverblock tiles போட ஒரு சதுர அடிக்கு சுமார் 75/- செலவாகிறது. பக்தர்கள் 4 சதுர அடி (300/- ரூபாய்) காணிக்கையாக அளித்து தங்கள் விவரங்களை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து தபால் மூலம்/நேரில் பிரசாதம் அளிக்க உள்ளோம்.


சுவாமியே சரணம் ஐயப்பா

ஸ்ரீ கல்யாண வரதர்

 ஸ்ரீ கல்யாண வரதர்

சாஸ்தாவிற்கு பற்பல அவதாரங்கள் இருந்தாலும் எங்களுக்கு கல்யாண வரதர் மீது ஒரு தனி பற்று. காரணம்: எங்கள் குருநாதர் உருவாக்கி காஞ்சி மஹா பெரியவர் மடியில் தவழ்ந்த முதல் பஞ்சலோக விக்ரஹம் எங்களின் கல்யாண வரதரே ஆகும்.   19 மார்ச் 1987 அன்று சுமார் 25 நிமிடம் கல்யாண வரதரை பற்றியும் சாஸ்தா அவதார தத்துவங்களை பற்றியும் பல்வேறு கேள்வி கணைகள் தொடுத்து அதன் மூலம் எங்கள் குருநாதருக்கு அருளாணை பிறப்பித்தார் மகாபெரியவர்.


கேரளத்தில் ஆரியங்காவு மற்றும் தகழி போன்ற ஆலயங்களில் சாஸ்தா கல்யாண உத்சவம் இன்றும் நடந்து வருகிறது. ஆனால் ஸ்ரீ பூர்ணா புஷ்காளா சமேத ஹரிஹரபுத்ர ஸ்வாமியின் திருக்கல்யாண வைபவத்தை பாகவத சம்பிரதாயப்படி பஜனை பத்ததியில் "ஸ்ரீ சாஸ்தா திருக்கல்யாண உத்சவம்" முதலில் நடத்தி மகிழும் பாக்கியம் எங்கள் குருநாதருக்கு கிடைத்தது. எங்கள் மாப்பிள்ளை கல்யாணவரதர் போகாத இடமே இல்லை. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தன் கல்யாண உத்சவத்தை தானே நடத்திக்கொண்டார்.

சபரிமலையில் நித்ய பிரம்மச்சாரியாக யோக நித்திரையில் அமர்ந்திருக்கும் பகவானுக்கு ஐயப்பனாக அதாவது மணிகண்டனாக அவதரித்த காலத்தில் திருமணம் கிடையாது. ஆனால் ஆதிகாலத்தில் ஹரிஹரபுத்திரனாக அவதரித்து காந்தமலையில் (கைலையில்)  கொலுவிருக்கும் சாஸ்தாவுக்கு சில அவதாரங்களில் பூர்ணா மற்றும் புஷ்களா என்று இரு தேவியருடன் இருப்பதாகவும் வேறு சில அவதாரங்களில் சத்தியகன் என்ற செல்லப்பிள்ளை மற்றும் பிரபாவதி என்ற தேவியருடன் உள்ளார் என்பது கர்ணபரம்பரையான வரலாறு ஆகும்.

நேபாள தேசத்தை பளிஞன் என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் மந்திர தந்திரங்களில் தேர்ந்தவன், ஒரு கன்னிகையை காளிகாதேவிக்கு அற்பணித்து, அவளருளால் மூப்பு நரை நீங்கி நீண்டகாலம் வாழலாம் என்று கருதி, சிவ பக்தையான ஓர் கன்னிகையை அழைத்து பலியிட துணிந்தான். இதையறிந்த கன்னிகை சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் சாஸ்தாவை அனுப்பி அவளை காத்தருளுமாறு பணிந்தார். சாஸ்தாவும் கன்னிகையை காத்தருளி, மன்னனையும் தவறு செய்வதிலிருந்து தடுத்தாட்கொண்டார். மனம் திருந்திய மன்னன், அழகும் அறிவும் சிறந்து விளங்கும் தம் மகளாம் புஷ்காளாவை சாஸ்தாவுக்கு மணம் முடித்து கொடுத்தான்.

கொச்சி ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த பிஞ்சகன் என்னும் மன்னன் ஓர் சமயம் வேட்டையாடும் நிமித்தம் வனம் சென்றிருந்தபோது, அந்தி சாய்ந்து இருள் சூழ்ந்திட,திரும்பிச்செல்லும் வழி தெரியாது தவித்து நின்றான். அதுசமயம் வனத்தில் திரியும் பூத பிசாசுகணங்கள் மன்னனை துன்புறுத்த தொடங்க, மன்னன் நடுங்கி பூதநாதனை தியானித்தான். அடியார் அபயக்குரல் கேட்டு குறைதீர்க்க விரைந்துவரும் ஹரிஹரசுதன், மன்னனை பூதகணங்களிடமிருந்து விடுவித்து காத்து அருளினான். மனமகிழ்ந்த அரசன், அதிரூபவாதியான தன் குமாரி பூர்ணாவை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு ஐயனை வேண்டினார்.ஐயனும் பூரணையை கடிமணம் புரிந்து கொண்டான்.

புஷ்களையை மணந்த ஐயன், பிறகு பூர்ணாவையும் மணந்து கொண்டதை அறிந்து சினந்த பளிஞன், மனிதர்களை போல நடந்து கொண்ட நீயும் ஒரு மனிதனாய் பிறந்து பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று சபித்தான். அதையே ஒரு வரமாக ஏற்றுக்கொண்டு பகவான் மணிகண்டராக அவதரித்து சபரிமலையில் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பதாகவும் கதைகளில் கூறப்படுகிறது.

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் "பூர்ணா" என்ற நாமத்துக்கு "எங்கும் வியாபித்து இருப்பவள்" என்றும் "புஷ்கரா" என்ற நாமத்திற்கு "எங்கும் நிறைவாகி இருப்பவள்" என்பது  பொருள். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் காந்தமலை ஜோதியாய் பகவான் எல்லா இடத்திலும் பூர்ணமாகவும் புஷ்களமாகவும் விளங்குகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.


தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு கல்யாண வரதர் நித்திய மங்களம் அருளட்டும். அதற்க்கு இக்கோவில் துணை நிற்கட்டும்

சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா - வரலாற்று நாயகன்

 கலியுகத்தில் பம்பையில் பிறந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷியை சம்ஹாரம் செய்து வன்புலி வாகனனாக தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோவில் கொண்டார் சாஸ்தா என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை


நம்மில் பலர் அறியவேண்டிய வரலாற்று சாஸ்தாபாண்டிய ராஜ வம்சம் எதிரிகளால் சீர்குலைக்கப்பட்டு கி.பி. 1081இல் சிறிய காலம் வள்ளியூரிலும் பின்பு தென்காசியிலும் ஆட்சி செய்தது. அந்த தென்காசி பாண்டியர்களின் வழி வந்த அரசர்கள் கேரள தேசத்தில் பந்தள நாட்டில் ஆட்சியை நிறுவினார்கள்.

பந்தள தேச அரசர்களின் ராஜசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் உதயணன் மற்றும் புதுச்சேரி முண்டன் போன்ற கொள்ளைக்காரர்கள் பலம் மிகுந்தவர்களாக இஞ்சிப்பாறை கோட்டையில் வாழ்ந்து வந்தனர். ராஜசேகர பாண்டியனின் பெண்ணை அரண்மனைக்குள் புகுந்து தூக்கிச்சென்று இஞ்சிப்பாறைகோட்டையில் உதயணன் சிறை வைத்திருந்தான். கோயிலை சூறையாட நினைத்து அக்கோவில் நம்பூத்திரியை கொன்றான். சபரிமலை சாஸ்தா கோவில் நம்பூத்திரியின் மகனான ஜெயந்தன் என்பவன் இஞ்சிப்பாறை கோட்டைக்குள் புகுந்து ராஜகுமாரியை காப்பாற்றி பொன்னம்பலமேட்டில் ரகசியமாகக் காந்தர்வ விவாகம் புரிந்தான். சாஸ்தாவின் அருளால் பந்தள இளவரசிக்கும் ஜெயந்தன் நம்பூதிரிக்கும் ஐயப்பன் என்ற மாவீரன் பிறந்து பந்தள ராஜனிடம் சேவகம் செய்து வந்தான்.

வண்டிப்பெரியாறு என்னும் இடத்தில் நடந்த சண்டையில் கொள்ளையர்களிடமிருந்து மதுரை அரசனான மானவிக்ரம பாண்டியனை ஐயப்பன் காப்பாற்றினார். அதன் பின்பு பாண்டியசேனை, பந்தளசேனை ஆகிய இரண்டு சேனைகளுக்கு தலைமை தாங்கி இஞ்சிப்பாறைக் கோட்டையின் கோட்டை மீது வாவரின் உதவியோடு படையெடுத்து உதயணன் மற்றும் புதுச்சேரி முண்டன் போன்ற கொள்ளைக்காரர்களை வீழ்த்தினார். அதன் பிறகு சபரிமலை கோவிலை புதுப்பித்து கட்டி எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே ஜோதியாக மாறி மகர சங்கராந்தியன்று சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் விக்கிரஹத்தில் ஐக்கியம் ஆனார். இவ்வாறு ஐயப்பனை பற்றி மற்றொரு வரலாறு கூறுகிறது. வரலாற்று ஐயப்பன் காரணமாக தான் இன்னும் நாம் பேட்டைதுள்ளல் செய்துவருகிறோம். பொன்னம்பலமேடு ஜோதியை மகர சங்கராந்தியன்று தரிசனம் செய்கிறோம்.

புராணகால இறை அவதாரத்தையும்  வரலாற்றுக்கால அவதார புருஷனையும் இணைத்து பேசி அதில் வரும் குழப்பங்களை களைய வேண்டும் என்ற நோக்கில் தான் எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா பல இடங்கள் சென்று ஆதாரங்கள் திரட்டி "சாஸ்தா மஹாத்மியம்" என்ற மாத இதழை late 1980 இருந்து தொடங்கி 10 வருடங்களுக்கு மேல் பிரசூரித்து வந்தார், "சாஸ்த்ரு சப்தாகம்" என்ற 7 நாள் சொற்பொழிவு தொடர் ஆங்காங்கே நடத்தி வந்தார்.

அவரது கனவான அஷ்ட சாஸ்தா திருக்கோவில் உருவாக முயற்சிகள் எடுத்து வருகிறோம். இத்திருக்கோவில் திருப்பணியை எங்கள் குருநாதர் பாதார விந்தங்களுக்கு அர்பணிக்கிறோம்.

சத்குருநாதரே சரணம் ஐயப்பா!!!

ஸ்ரீ வீர (அஸ்வாரூட) சாஸ்தா

 ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் கேரளத்தில் அவதரித்தவர். சாஸ்தா அரும்புகழ் பெற விளங்குவதும் கேரளத்தில். சகல தெய்வங்களையும் போற்றித் துதி செய்த ஆசாரியர் சாஸ்தாவை தோத்தரித்திருக்கிறாரா?


சிவபெருமானைத் திருவடியிலிருந்து திருமுடிவரை வருணித்து சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் என பகவத்பாதர் அருளியிருக்கிறார். அதில், முதலில் ஈசன் வாஸம் செய்யும் கைலாஸத்தையும், அவனது திவ்யாயுதங்களையும் வாஹன ரிஷபத்தையும் தோத்தரித்து விட்டு, சிவ குமாரர்களை தலைக்கொரு ஸ்லோகத்தால் போற்றுகிறார். இங்கே தான் ஆனைமுகனையும், ஆறுமுகனையும் துதித்தபின் ஒரு முழு ச்லோகத்தால் ஐயப்பனை வாழ்த்தி வழிபடுகிறார்.

விற்கையனாக விசைப்பரியேறிச் செல்வது வீரக்கோலம். புலிப்பாலுக்காகப் பந்தள ராஜகுமாரனாகக் காடு சென்றதே போன்ற தோற்றம். ஆனால் இது மூல ஐயப்பனின் அவதாரத்திலே காணும் நிகழ்ச்சியே. ஆசாரியர் மூல ஐயப்பனை நினைத்தே துதிக்கிறார் எனக் கொண்டால், சிவ கணத் தலைவனாக அவன் வேட்டைக்குச் செல்வதைச் சொல்கிறாரென்று ஆகும். பூத பர்த்தா என்று அவர் சொல்வது, ஈசனின் பூதப்படைக்கு நாயகன் சாஸ்தாவே என்று அவர் கருதுவதைக் காட்டுகிறது.

மூத்த பிள்ளை கணபதியை நாம் சிவ ஸேனா நாதனாக எண்ண, ஆசாரியரோ வீர சாஸ்தாவிற்கு இவ்வுயர்வைத் தருகிறார். (மலையாளத்தில் பூத நாதன் என்று ஐயப்பனைக் குறிப்பிடுதுண்டென்றும், மக்களும் அப்பெயர் வைத்துக் கொள்வதுண்டென்றும் அறிகிறோம்.)

பின்பு, வேட்டையாடும் வீரனிடம் கனிந்து வேண்டுகிறார். பின் இருவரிகளிலே பூதநாதனே! உனக்கு வேட்டை விளையாட்டில் தானே வேட்கை? அப்படியானால் வா, எண்ணங்கள் மண்டி வளர்ந்திருக்கும் என் மனமெனும் காட்டுக்கு! இந்தக் காட்டிலே விருப்பு, வெறுப்பு முதலான பல்வேறு விலங்கு கூட்டங்கள் திரிகின்றன. அவற்றுக்கு அச்சமூட்டி வேட்டையாடிப் புரிவாய்! இப்படிப் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.

கிராத வேடம் கொண்ட பரமேசனிடம் இவ்வாறே தமது சித்த அரணியத்திலே வேட்டையாட, ஸ்ரீசங்கரர் வேண்டுவதை சிவானந்த லஹரியில் காண்கிறோம். இங்கே மூத்த பிள்ளையின் ஸ்தானத்தோடு அப்பனின் ஸ்தானத்தையும் ஐயப்பனுக்கே கொடுத்து விடுகிறார்.

 “துரகவாகனம் ஸுந்தரானனம்” என்று ஹரிஹரசுதாஷ்டகம் (ஹரிவராசனம் விச்வ மோஹனம்) சாஸ்தாவை குதரைமேல் வர்ணித்துள்ளார் ஸ்ரீ கம்பங்குடி குளத்தூர்  ஸ்ரீனிவாச ஐயர். மேலும்

“அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்” என்ற ஸ்லோகத்தில் சத்ருக்களை அழிப்பவனாக சாஸ்தாவை வர்ணித்துள்ளனர்

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் குதிரை வாகனத்தில் அய்யனார் (சாஸ்தா) கோவில்கள் பல காணலாம். கைகளில் ஆயுதம்  தாங்கியும், மின்னலை  விட  வேகமாக  செல்லும் பரிமீதேறி வீரக்கோலம் பூண்டு தீயவர்களை அழித்தும் மண்ணின் மைந்தர்களை காக்கும் மாவீரன்.

“அஸ்வாரூடையை நம” என்று தர்ம சாஸ்தா அஷ்டோத்திரத்தில் வருவது போல குதிரை வாகனனாகவும் கேதுவின் அம்சம் என்று குறிப்பதற்காகவும் வீர சாஸ்தா கேடையம்-வாளுடன் காட்சி அளிக்கிறார். வேப்பம்பட்டு அஷ்டசாஸ்தா திருக்கோவிலில் தான் வீர சாஸ்தா முதன்முதல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


ஸ்ரீ மஹா (கால) சாஸ்தா

 “ஓம் மஹா சாஸ்த்ரே நம”  என்ற மந்திரமே தர்ம சாஸ்த்ரு அஷ்டோத்திரத்தின் முதல் மந்திரமாகும்.  


மஹாசாஸ்தா என்ற சொற்றொடர் ஸ்ரீ சாஸ்தாவின் மூல மந்திரத்திலுள்ளது. ஸ்ரீ சக்ரார்ச்சன தீபிகா என்ற நூலில் கொடுக்கப் பட்டுள்ளது.  இவருக்கு மற்றொரு பெயர் கால சாஸ்தா. கஜாரூட சாஸ்தா என்றும் அழைப்பதும் மரபு.

“ஓம் கால நாசன தத்பராய நம” கால-எமனை, நாசன-அழிக்கும், தத்பர-கருத்துள்ளவன், எம பயம் அகற்றுபவன். சாஸ்தா எமனுக்குக் காலில் விலங்கு பூட்டியதைப் பற்றி ஸ்ரீமணிதாஸர், 

“கர்த்தனாம் கேமன் என்றும் கண்டிருக்கின்றதொரு
தொண்டனுக்காகவே காலனை விலங்கு பூட்டி
துச்சணம் செய்யாமல் அக்ஷணம் இருத்தியுன்
சொல்லுறுதி கேட்க வைத்தாய்”

எனப் பாடியுள்ளார்.  

எமனே ஸ்ரீ சாஸ்தாவின் பெயரை உடையோர், அவருடைய பக்தர்கள் முதலியோரைக் கண்டால் அஞ்சுகின்றான். இந்த விஷயம் எமன் தன் தூதுவர்களிடம் சொல்வதாக ஸ்காந்த மஹாபுராணத்தில் (சிவரஹஸ்ய கண்டம், உபதேச காண்டம், அத்யாயம் 26) கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ மஹா சாஸ்தாவை வணங்குவோருக்கு எமபயம் நீங்கும்.

“தவளவாஹனம் திவ்யவாரணம்”, “களபகேசரி வாஜிவாஹனம்” என்றெல்லாம் ஹரிஹரசுதாஷ்டகம் (ஹரிவராசனம் விச்வ மோஹனம்) சாஸ்தாவை கஜாரூடனாக வர்ணித்துள்ளார் ஸ்ரீ கம்பங்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயர்.

“மத்தமாதங்க கமநம் காருண்யாம்ருத பூஜிதம்
ஸர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்”

மதம் பொருந்திய யானையை ஊர்தியாகக் கொண்டவரும், கருணை பொழியும் திருமுகத்தினரும், வணங்கத்தக்கவரும, எல்லா துன்பங்களையும் நீக்குபவரும் ஆகிய சாஸ்தாவை வணங்குகிறேன் என்றும்  
.
“த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன்விதம்
கஜாரூடமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்”

த்ரயம்பகபுரம் என்னும் புனித ஸ்தலத்தின் அரசனும், விநாயகர் அருகில் இருப்பவரும், யானையை வாகனமாக கொண்டு தம் பக்தர்களுக்கு அருள்புரிபவராக விளங்கும் சாஸ்தாவை வணங்குகின்றேன் என்றும் ஹரிஹர புத்ர நமஸ்கார ஸ்லோகம் சொல்கின்றதை கேட்கும்போது சாஸ்தாவிற்கு பிரதானமான வாகனம் யானை என்பதை புரிந்துகொள்ளலாம். 

கையில் கதை, அங்குசம்,பாசம், சூலம் போன்ற ஆயுதங்கள் விளங்கும் கரங்களை கொண்டு, மதம் கொண்ட யானை மீது எதிரிகளை அழிப்பவராக திகழ்கிறார். இன்னும் பற்பல நூல்களிலும் கஜ வாகனனாக கூறப்பட்டுள்ளது. 

ஆரியங்காவு, த்ரியம்பகபுரம் (திருவாரூர் அருகில்), காஞ்சி காமாக்ஷி சன்னதி, கள்ளிடைகுரிச்சி போன்ற மிக தொன்மையான பாடல்பெற்ற ஸ்தலங்களில் சாஸ்தாவை மதகஜ வாகனனாக காண முடிகிறது. கேரளா, தமிழ் நாட்டில் யானை வாகனம் கொண்ட அய்யனார் (சாஸ்தா) கோவில்கள் கணக்கிலடங்கா. இருப்பினும் மஹா சாஸ்தாவுக்கு கோவில் இது வரை இல்லை. வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோவிலில் தான் முதன்முதல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


ஸ்ரீ ஞான (வித்யா) சாஸ்தா

 சாஸ்தா என்ற பெயருக்கு வழிநடத்துபவர் (அல்லது குரு) என்று அர்த்தம். அதனால் தான் ஐயப்பன் வழிப்பாட்டில் குரு முகமாகவே எந்த ஒரு செயலையும் செய்ய அறிவுரைப்பார்கள். 


ஞானமே வடிவாக தான் இருந்தாலும்,நியதிப்படி தன் குருவான சிவபெருமானிடம் உபதேசம் எடுத்துள்ளார். ஆசார்ய ஸ்தானத்தில் சிவபெருமானிடம் புஷ்பகிரி என்ற மலையருகில் உள்ள அழகிய மாளிகையில் சாஸ்தா, விநாயகர், கந்தர்,பார்வதி தேவி, பைரவர், வீரபத்ரர், மற்ற பூதகணங்கள் ஆகியோர் உபதேசம் எடுத்ததாக ஸ்காந்த மகாபுராணம் கூறுகிறது (சங்கர சம்ஹிதை, சிவ ரஹஸ்ய கண்டம், உபதேச காண்டம் - 86).

“ஓம் தக்ஷிணமூர்த்தி ரூபகாய நம; ஓம் வீணா புஸ்தக தர தக்ஷிணாமூர்த்தி சாஸ்த்ரே நம:” etc போன்ற நாமங்கள் நமக்குணர்த்தும் விஷயங்கள்:சாஸ்தா மாணிக்க வீணையை ஏந்திய கையுடன், கல்லால மரத்தின் அடியில் அமர்ந்துள்ள குருபகவான் போல் குரு ஸ்தானத்தில் அமர்ந்து மேதா தக்ஷிணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார். 

கும்பகோணம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் தக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ப்ரகாரத்தின் மேல்பத்தியில் கல்யாண சாஸ்தா உற்சவ மூர்த்தியாக வீற்றிரிக்கிறார். ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டம், ஹேமாவதி என்ற ஊரில் சாஸ்தா மாதிரி குந்தியிட்டு உட்கார்ந்த நிலையில் தக்ஷிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்.

“ஓம் சர்வ ஸ்த்ரார்த்ரார்த்த தத்வஞாய நம, ஓம் வித்யா விருக்ஷாய நம, ஓம் மூல வித்யா ஸ்வரூபகாய நம”etc என்றெல்லாம் சாஸ்த்ரு சஹஸ்ரநாமத்தில் படித்திருக்கிறோம் அல்லவா?

ஞானம் என்பது பகவானுடைய நிர்குண, நிராகார, நிரதிசய தத்துவங்களின் பெருமை, ரகசியம், ஆகியவற்றை அறிவது. விக்ஞானம் என்பது குணங்களோடு கூடிய (ஸகுணமான) தெய்வத் திருமேனியின் தத்துவங்கள், கல்யாண குண வைபவங்கள், மகிமை, பெருமை, நாம விசேஷம் இவற்றைப் பற்றிய உண்மையறிவு. இவ்விரண்டினையும் அளிப்பவர் சாஸ்தா.

இவ்வுலகில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான எல்லாத் துறைகளைப் பற்றிய அறிவுவையும் தன் பக்தர்களுக்கு வழங்குபவன். அது தவிற, எந்த ஒரு ஞானத்தையடைந்தால், மற்றெல்லா ஞானத்தையும் அடைந்ததாக ஆகுமோ, அல்லது எதையடைந்தபின் மற்ற ஞானம் தேவையற்றதாக ஆகிவிடுமோ, அந்த தன்னைப் பற்றிய ஞானமாகிய ஆத்ம ஞானத்தை அருள்பவரான சாஸ்தா நம்மோடு இருக்கும்போது மனிதர்களாகிய நமக்கு வேறு என்ன தேவைப்படும்?

திருச்சூர் அருகே திருவல்லக்காவு என்ற இடத்தில் சாஸ்தா ஞானமூர்த்தியாக வழிப்பட்டு வருகின்றார். இங்கு வித்யாரம்பம் செய்த (எழுத்துக்கள் தொடங்கும்) ஒரு குழந்தை அறிஞர் ஆவது நிச்சயம் என்ற காரணத்தினால் ஆயிரக்கணக்கனோர் தன் குழந்தைகளின் வித்யாரம்பம் இங்கு செய்வது வழக்கம்.

ஸ்ரீ சந்தான பிராப்தி சாஸ்தா

 ஹரிஹர புத்திரரான சாஸ்தாவை மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் கூறுவதுண்டு. சிவபெருமான், சாஸ்தா அவதரித்தவுடன், “குழந்தாய்! நானும், விஷ்ணுவும், பிரம்மனும் உன் உருவாய் அவதரித்திருக்கிறோம்” என்று பாராட்டியதாக-


"த்வத் ரூபேணாவதீர்ணாஸ்ம, ப்ரஹ்மாவிஷ்ணுரஹம் ஸுத"                                   என்று ஸ்காந்த புராணத்திலுள்ள கோடிருத்ர ஸம்ஹிதையிலிருந்து தெரிகிறது.

மேலே கூறிய கருத்துக்களின்படி, ஹரி-ஹர சக்திகளான லக்ஷ்மியும், துர்கையும் பூர்ணா-புஷ்களாவாக ஐயனை அலங்கரிக்கின்றன. பிரம்மனும் இணைந்து மும்மூர்த்திகளின் அம்சமாக சாஸ்தாவை தியானிக்கும் போது, பிரம்மனது சக்தியாம் ஸரஸ்வதியானவள் பிரபா என்ற பெயரில் ஸ்ரீ மஹா சாஸ்தாவை காந்தர்வ முறையில் மணந்து கொண்டு ஸத்யகன் என்ற செல்லப்பிள்ளையுடன் கொலுவிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சாஸ்தா-பிரபாவதி காந்தர்வ விவாஹம் அடிப்படையிலேயே எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா இயற்றிய சாஸ்த்ரு அஷ்டபதியும் அமைந்துள்ளது. கல்லிடைக்குறிச்சி, கொச்சி, நூறணி போன்ற பல இடங்களில் நடைபெற்று வரும் சாஸ்தாப்ரீதியில் செல்லப்பிள்ளைக்கு தனி ஸ்தானம் உண்டு. 

இரண்டு ஆண்மூர்த்திகளுக்கு அதிசயமான அவதாரமாக அவதரித்த ஹரிஹரபுத்திரனை பிரம்மச்சாரியாக (ஐயப்பனாக) உலகமே வழிபடும் போது, அந்த சாஸ்தாவைக் கல்யாண கோலத்தில் கண்டதுமின்றி குழந்தையுடனும் இருப்பதாக தியானிக்கும் போது இது ஒரு விசேஷமான அனுக்ரகமூர்த்தி என்று உணரலாம்.

ஸ்ரீ பூதநாத கராவலம்பத்தில் “ஸம்பூர்ண பக்த வர ஸந்ததி தான சீல” என்று வருகிறது. ஸ்ரீ மஹா சாஸ்தாவின் மூலமந்திரத்திலும் “புத்ரலாபாய” என்று வருகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் க்ருதியில் “ப்ரார்த்தித புத்ர ப்ரதம்” என்று பகவானைப் பாடுகிறார். 

இராமாயணத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடந்த பொது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஒரு "மகத்பூதம்" என்று வால்மீகி வர்ணிப்பது சந்தான ப்ராப்தி அருளும் சாஸ்தாவையே ஆகும். சோட்டானிக்கரை பகவதி, திருவள்ளக்காவு போன்ற கோவில்களில் இவரை  அரூபமாக வழிபட்டு வருகின்றனர்.


ஸ்ரீ சம்மோஹன சாஸ்தா

 சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடியைச் சுமந்து கொண்டு சபரிமலைக்குக் கிளம்பும் முன்னர் ஓர் தேங்காயைத் தனது வீட்டின் வாயிற்படி அருகில் உடைக்கிறான். தான் இல்லாத நேரத்தில் தனது இல்லத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாத்து வர பகவானின் பூத கணங்களில் ஒன்றை நிறுத்த வேண்டி இதை செய்கிறான். உடனே தேங்காய் உடைத்த இடத்தில் ஓர் பூதகணம் தங்கிக் காவல் காக்கிறது.


சபரிமலை யாத்திரை முடிவுற்று வீடு நெருங்கியவுடன். யாத்திரைக் காலத்தில் தன் இல்லத்தைக் காத்து வந்த பூதகணத்தை தியானித்து வணங்கி ஐயனே! நான் யாத்திரை முடிந்து திரும்பும் வரை என் உடமைகளையும், குடும்பத்தினரையும் காத்தருளிய உங்களுக்கு எங்கள் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனி தாங்கள் தங்கள் இருப்பிடம் செல்வீராக என்று முன்பு தேங்காய் உடைத்த இடத்திலேயே மீண்டும் தேங்காய் உடைத்து விட்டு வீட்டுக்குள் நுழைகிறான்.புராண காலம், வரலாற்றுக்காலம், நமது காலம் என்று காலங்கள் மாறலாம் ஆனால் இறைவன் கருணை என்றும் மாறாது. குறையாது என்பதை பின் வரும் கந்தபுராணத்தின் நிகழ்ச்சி நமக்கு தெரிவிக்கின்றது.

சூரபத்மன் கொடுமைகள் தாங்க முடியாமல் சிவனிடம் முறையிட இந்திரன் செல்ல வேண்டிய கட்டாயம் நேர்ந்தது, பூலோகத்தில் சீர்காழி அருகே மறைந்து வாழ்ந்து வந்த இந்திரன் கைலாயம் செல்ல முற்பட்டான். தான் பூலோகத்தில் இல்லாத நேரத்தில் சாஸ்தாவின் பாதுகாவலில் இந்திராணியை விட்டு சென்றான். இந்திரன் கைலாயம் சென்ற நேரத்தில் சூரபத்மனின் தமக்கையான அஜமுகி இந்திராணியை சித்ரவதை செய்ய, உடனே சாஸ்தாவின் பரிவாரமான வீரமாகாளர் அஜமுகியின் கையை வெட்டி எறிந்தார்.சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகத்தோன்  பிறக்க போகிறார். 

ஆறுமுகத்தோனே சூரபத்மனை வதைப்பார் என்ற செய்தியை அறிந்தவுடன் இந்திரன் பூலோகம் திரும்பினார்.தான் பூலோகத்தில் இல்லாத நேரத்தில் நடந்ததை கேட்டு சாஸ்தாவை த்யானிக்க சாஸ்தா வெள்ளையானை மேல் பூரணை புட்களையுடன் காட்சி தந்ததாக கந்தபுராணம் நமக்கு கூறுகிறது.



மேலும் புராணங்களில் பலவற்றுள்ளும் தொன்மையானது ஸ்காந்தம் என்பார்கள். அதில் திருமுருகவேள் அவதார காலத்திற்கும் முன்பே சாத்தனார் அவதாரம் செய்து பூரணை புட்களை  எனும் இருதேவியருடன் கயிலையில் வாஸம் செய்த ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதி என்று அறியலாம். இறைவனை முருகனின் தம்பியே முருகனுக்கிளையோனே என்றும் அழைப்பதை விடுத்து முருகனின் சோதரனே சரணமய்யப்பா என்று அழைப்பதே சாலப்பொருத்தமாகும்.

Contact Us

Adress/Street

Sree Ashta Sastha Temple, Veppampattu, Tamil Nadu 602 024, India

Phone number

+91 9444 10 431

Email

info@ashtasastha.org

Google Map

http://bit.ly/ashtasastha